ராஜஸ்தானில் கொட்டு மழையால் மக்கள் பாதிப்பு

ராஜஸ்தான்: பிபர்ஜோய் புயல் தாக்கத்தால் சூறாவளியுடன் ராஜஸ்தானில் கொட்டும் கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிபர்ஜோய் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாகவும், பிற்பகலில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பிபர்ஜோய் புயல் தாக்கல் காரணமாக சூறாவளியுடன் கனமழை பெய்துவருகிறது.

உதய்பூரில் வீசிய கடுமையான காற்றில் கட்டிடம் ஒன்றின் கண்ணாடி பெயர்ந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.