சிறப்பு பஸ்களில் கூட்டமில்லாததால் பயமின்றி பயணிக்கும் மக்கள்

தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லாததால் தொற்று பயமின்றி பயணியர் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

வழக்கமாக தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பஸ் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி கூறியுள்ளன.

சென்னையில் வேலை செய்தோரில் 50 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இதனால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் இல்லை. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 1350 பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 55 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்தனர்.

இன்றும், நாளையும் அதிமானோர் பயணிக்க வாய்ப்புள்ளதால் வழக்கமான 2000 பஸ்களுடன் 1705 சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.