பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ களம் இறங்குகிறது

புதுடில்லி: மீண்டும் களம் இறங்குகிறது... பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ ( BGMI ) விளையாட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது.

ஒரே ஆண்டில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று பிரபலமடைந்த பிஜிஎம்ஐ விளையாட்டை மீண்டும் இந்தியாவில் களமிறக்க கிராப்டன் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

மத்திய அரசின் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, 3 மாத சோதனை அடிப்படையில் பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் கவனம் சிதைகிறது. எப்போதும் இந்த விளையாட்டே கதி என்று கிடந்த பல குழந்தைகளுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படக்கூடாது என்று பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்துகின்றனர்.