பிலிப்பைன்ஸ் மயோன் எரிமலை சீற்றம்... மக்களுக்கு அரசு எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ்: மயோன் எரிமலை சீற்றம் அதிகரித்து வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை சீறி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மணிலாவிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மயோன் எரிமலை தொடர்ச்சியாக சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

அடுத்த சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ, எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பு வெளியேற வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

5 ஆண்டுகளுக்கு முன், மயோன் எரிமலை வெடித்த போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.