தென் ஆப்பிரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

புதுடில்லி: தென் ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பை ஏற்றார்... தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

நேற்று தென் ஆப்பிரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இது குறித்து தமது டிவிட்டரில் பதிவு வெளியிட்ட மோடி ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜோகனஸ்பர்க்கில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும் தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுடன் அரசு முறை உறவுகள் தொடங்கிய 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடியின் தென் ஆப்பிரிக்க பயணம் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.