நிவர் புயல் தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

'நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினர்.

மேலும் நிவர் புயலை எதிகொள்ளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் உரையாடினேன்.

புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.