பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக இளவயது சிறுவனை தேடும் போலீசார்

கனடா: இளவயது சிறுவனை தேடும் போலீசார்... 24 மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் பொதுப் பாதையில் இரண்டு பாலியல் வன்கொடுமைகளைச் செய்ததாகக் கூறப்படும் இளவயது சிறுவனை ரொறன்ரோ போலீசார் தேடி வருகின்றனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ஜூலை 7ம் திகதி அதிகாரிகள் தரப்பு அறிக்கை ஒன்றை வெளிட்டிருந்தது. அதில், கேட்டினோ ஹைட்ரோ காரிடார் பாதை அருகாமையில் மதியத்திற்கு மேல் சுமார் 6 மணியளவில் பாலியல் துஸ்பிரயோகம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் கிழக்கு நோக்கி பயணப்படுகையில், இளவயது சிறுவன் பைக்குடன் குறித்த பெண்ணை வழிமறித்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஜூலை 8ம் திகதி, மாலை சுமார் 5 மணியளவில் அதே பாதையில் இன்னொரு பெண்ணிற்கு குறித்த சிறுவனால் வன்கொடுமை நடந்துள்ளது. சம்பவத்தின் போது பைக்கில் சென்ற பெண்ணை திட்டமிட்டு நிறுத்த வைத்து, பின்னர் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இரண்டு வழக்கிலும் தொடர்புடைய சிறுவன் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர் எனவும், 5’5” உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். தொடர்புடைய சிறுவன் குறித்து தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.