ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சாலையில் தஞ்சம் புகுந்த மக்கள்

ஜப்பான் : ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜப்பானில் உள்ள உயோசுவில் நகரின் வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகி உள்ளது. இதனை அடுத்து திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக நாகானோ மற்றும் கனாசாவா நிலையங்களுக்கு இடையில் ஹோகுரிகு ஷிங்கன்சென் உட்பட சில ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பானின் பொது ஊடக அமைப்பான NHK வலியுறுத்தி உள்ளனர்.