குடியரசுத்தலைவர் திரவுபதி இன்று தமிழகம் வருகை

சென்னை:குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்; பெங்களூருவி ல் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

பெங்களூருவிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை 6 மணிக்கு விமானப்படை தனி விமானம் மூலம் புறப்படும் நிலையில், மாலை 6.50மணிக்கு சென்னை பழையவிமான நிலையத்திற்கு வருகிறார்.இதனையடுத்து திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை செல்கிறார்.

சென்னை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்; நாளை காலை குடியரசுத்தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகிஉ ள்ளது.

அடுத்து நாளை பகல் 11.55 மணிக்கு பழைய விமான நிலையம் செல்லும் குடியரசுத் தலைவர் , 12.05மணிக்கு விமானப்படையின் தனி விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்படுகிறார். குடியரசு தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டு உள்ளன.