பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பு

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூவலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும்

கல்விக்கான முக்கியத்துவம் மூலம் பலருக்கு நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்! அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கம் அளித்து வழிகாட்டும், அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.