கலகலப்பாக குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார்... பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஆளுநர் மாளிகைக்கு சென்று இருந்த அவர் அங்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

அப்போது அவரது பேரக்குழந்தைகளுடன் நாணயத்தை வைத்து விளையாடும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 2 குழந்தைகளை தலையோடு தலை மோத வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஒரு நாணயத்தை பிரதமர் மோடி தனது தலையில் வைக்கிறார்.

பின்னர் தனது தலையின் பின்புறத்தை கையால் தட்டி அந்த நாணயத்தை இன்னொரு கையில் விழவைக்கிறார். அதே நாணயத்தை ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் பேரக்குழந்தைகளின் நெற்றியில் வைத்து விட்டு பிறகு அதை எடுத்து மறைத்து வைத்து மேஜிக் காட்டினார்.

இதை அறியாமல் 2 குழந்தைகளும் தங்கள் தலையின் பின்புறம் தட்டுகின்றனர். ஆனால் மோடியின் கையில் அந்த நாணயம் இருந்ததால் அது விழவில்லை. உடனே மோடி அவர்கள் தலையில் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடையில் அந்தநாணயத்தை குழந்தைகள் கையில் கொடுத்தார். இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.