அமரீந்தர் சிங் உடல் நலம் குறித்து தொலைபேசி மூலம் பிரதமர் நநேர்திர மோடி விசாரிப்பு

பஞ்சாப்: லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002 - 2007 மற்றும் பின்னர் 2017 - 2021 உட்பட ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு நேற்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் அமரீந்தர் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நலம் விசாரித்துள்ளார்.