தென்காசியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி : தென்காசியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இது அடுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இவ்வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும். இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர். அதனால் வேலைவாய்ப்பை தேடி வரும் நபர்கள் இளைஞர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் முகாமிற்கு வருகை புரிய உள்ளவர்கள் து decksjoblar@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் 04633-213179 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.

இதையடுத்து இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டு தனியார் துறையில் பணி நியமனம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது அதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.