நெல்லையில் நாளை (ஆகஸ்ட் 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை: தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லையில் வண்ணாரபேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாபெரும் முகாமில் 200க்கு அதிகமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மேலும் இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் கணினி பயிற்சி பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ஏற்ப கடன் உதவிகள் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதை அடுத்து இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் சுய விவரம், கல்வி சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பங்கேற்க வேண்டும். மேலும் முகாமில் கலந்து கொள்வோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இம்முகாம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel-ல் இணைந்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.