அமெரிக்காவிலும் லாரியில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி

புதுடெல்லி: சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மக்களின் நிலையை கேட்டறியும் வகையில் அங்கேயும் அவர் லாரியில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த மாதம் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது லாரி ஓட்டுனர்களுடன் ராகுல் பேசிக்கொண்டு வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின.

மேலும் தாபாவில் லாரி ஓட்டுனர்களுடன் ராகுல் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மக்களின் நிலையை கேட்டறியும் வகையில் அங்கேயும் அவர் லாரியில் பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுலின் லாரி பயணம் குறித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.