தமிழ்நாட்டில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்குமாம்


சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நவம்பர் 14ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையானது தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 1 வாரத்திற்கு நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் வரும் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது