உத்தரபிரதேசத்தில் ராவணன் தகனம் நிகழ்ச்சி மழையால் பாதிப்பு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 600 ஆண்டுகளாக ராவணன் தகனம் நடந்து வருகிறது. ஆனால், இம்முறை மழையால் நிகழ்ச்சி பாதிக்கப்பட்டது.நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களில் மக்கள் பங்கேற்றனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக, 2 ஆண்டுகளாக அமலில் இருந்த தடைகள் வாபஸ் பெறப்பட்ட, இந்த தசரா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.இதன் ஒரு பகுதியாக ராவணன் தகன விழாவும் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். பீகாரில், பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் ராவணன் தகனம் செய்யப்பட்டது.