ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி: திரும்ப பெறுவதாக அறிவிப்பு... 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கையிருப்பில் உள்ள 2000 ரூபாய் தாள்களை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.