வாக்கெடுப்பை நிராகரியுங்கள்... உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

உக்ரைன்: வாக்கெடுப்பை நிராகரியுங்கள்... உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி , ரஷ்யா கைப்பற்றிய உக்ரேனிய வட்டாரங்களை அதனுடன் இணைப்பது குறித்து நடத்தவிருக்கும் வாக்கெடுப்பை நிராகரிக்கும்படி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் 4 உக்ரேனிய வட்டாரங்கள் இருக்கின்றன. உக்ரைனின் டானட்ஸ்க், லுகான்ஸ்க், ஹெர்சன், ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்த வட்டாரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுமா என்பதை மாஸ்கோ நடத்தவுள்ள வாக்கெடுப்பு நிர்ணயிக்கும். இந்நிலையில் உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், இந்த வாக்கெடுப்பை மோசடி நடவடிக்கை என ரஷ்யாவை சாடியுள்ளன.