தமிழகத்தில் ஓட்டுநர்களுக்கு நிவாரணமா? .. தமிழக அரசு விளக்கம்

சென்னை : ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கவுள்ளது என்ற தகவல் மக்களிடையே பரவி கொண்டு வருகிறது. அதில் நிவாரணத்தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆயிரம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி கொண்டு வருகிறது. இதனையடுத்து மக்கள் பலரும் ரூ.1000 நிவாரணத்தொகை பற்றி அரசிடம் கேள்வி எழுப்பி கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இது குறித்து விளக்கமளித்துள்ள அரசு, ஓட்டுநர்களுக்கு ரூ. 1000 வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அரசால் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அதனால் இதனை நம்பி யாரும் இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.