ஆஸ்திரேலியாவின் தீவில் சிக்கி தவித்த இந்தோனேசியா மீனவர்கள் மீட்பு

ஆஸ்திரேலியா: மீனவர்கள் மீட்பு... ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில் உள்ள பெட்வெல் தீவில் வெப்பமண்டல சூறாவளியில் 2 மீன்பிடி படகுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதில் இருந்த மீனவர்கள் 11 பேர் 6 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.