ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அமைச்சர் டெல்லி வருகை

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு... டெல்லியில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கய் ஷோகய், சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங் பூ டெல்லி வருகிறார்கள்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் இவ்விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருவது உறுதி செய்யப்பட்ட போதும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக கலந்துக் கொள்வாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சீன அமைச்சர் லீ இந்தியா வருவதால் கடந்த மூன்று ஆண்டுகளாக லடாக் எல்லையில் நீடிக்கும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைக்கும்.