ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த எம்.பி., சந்திம வீரக்கொடி

கொழும்பு: பட்டினியை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தனது உயிருள்ளவரை அவருடன் செயல்பட உள்ளதாக கூறி ஐக்கிய மக்கள் சக்தியில் எம்.பி, சந்திம வீரக்கொடி இணைந்தார்.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் இணைந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி ஹினிதும பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார்.

இந்த நாட்டில் பட்டினியை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தனது உயிருள்ளவரை அவருடன் இணைந்து செயற்படப்போவதாகவும் வீரக்கொடி தெரிவித்தார்.