சிங்கம்புணரி அருகே பள்ளிக்கூடம் திறப்பு விழா

சிவகங்கை: பள்ளிக்கூடம் திறப்பு... சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கூடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இந்த பள்ளிக்கூடம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி மிஷன் உரிமையாளர் டாக்டர் சேதுராமன் சொந்த ஊர் வாராப்பூர் கிராமம் ஆகும்.

அதே வாராப்பூர் பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் பயின்ற டாக்டர் சேதுராமன், கடந்தாண்டு வந்தபோது, பள்ளி கட்டிடம் குறித்த மாணவர்களின் வீடியோ வைரலானது குறித்து கூறப்பட்டது. இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன், பள்ளிக்கட்டிட செலவு முழுவதையும் ஏற்றது. கட்டுமான பணிகள் முடிந்து, அமைச்சர் மற்றும் மீனாட்சி மிஷன் நிர்வாகிகளால், பள்ளிக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.