திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது


சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவின் அனைத்து அணி செயலாளர் கூட்டம் காணொலியில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல இந்த கூட்டம் நடைபெறுகிறது.

நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இந்த கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக,

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், தி.மு.க அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக “நீட் விலக்கு, நம் இலக்கு” எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.