நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
53 வயதாகும் சீமான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் அதே நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல்நலம் குறித்த தகவல் இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.