பொன்முடி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு, திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வந்து ஆலோசனை நடத்தினர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இரவில் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அதிகாலை வரை விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என சம்மனும் அனுப்பியுள்ளது.

மேலும் பொன்முடி மகனும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு, திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

இன்று மாலை பொன்முடி மற்றும் அவரின் மகன் அமலாக்கத்துறையில் ஆஜராக உள்ள நிலையில் தற்போது இவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் என்.ஆர் இளங்கோவும் கலந்து கொண்டுள்ளார்.