பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் படப்பிடிப்பு... விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் நேற்று திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டன.

படக்குழுவினரின் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் கயிறு கட்டி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023ல் வெளியாகும்.