வாக்குவாதத்தில் கோபமடைந்து துப்பாக்கியால் சுட்ட பாஜ எம்எல்ஏ மகன்

போபால்: வாக்குவாதம் செய்தவரை துப்பாக்கியால் பாஜக எம்எல்ஏ மகன் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்கூர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (40). இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் ஒரு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதும் விவேகானந்தன் தனது துப்பாக்கியால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சூர்யகுமாரின் வலது கையில் தோட்டா பாய்ந்தது. பலத்த காயம் அடைந்த சூர்யகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, வனக் காவலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் விவேகானந்தன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.