தாயை தீவைத்து கொலை செய்த மகனுக்கு 18 ஆண்டுக்கு பின் மரண தண்டனை

தாயை தீவைத்து கொளுத்தி கொலை செய்த மகனுக்கு 18 வருடகால நீண்ட விசாரணைக்கு பின்னர் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனது தாயை மண்ணெண்ணெய ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொலை செய்தார் என கைது செய்யப்பட்ட மகனுக்கு 18 வருடங்களின் பின்னர் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது தங்காலை உயர் நீதிமன்றம். ரோஹித ஜெயந்த ( வயது 58) என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நேரம் தங்காலை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.பின்னர் அவருக்கு எதிராக தங்காலை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த 18 வருடகாலமாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.