அனைத்துக் கட்சியில் கலந்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் சோனியா கோரிக்கை

பெங்களூர்: பங்கேற்க அழைப்பு... பெங்களூரில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு மம்தா பானர்ஜியிடம் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் நாளை தொடங்கி இரண்டுநாள் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ் எம்.பி.சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தாவிடம் சோனியா காந்தி நீண்ட நேரம் பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த போதும் மம்தா கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் இம்முறை மம்தா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.