தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடந்த 25ம் தேதி 400 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்களை கைது செய்தனர். மேலும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று இலங்கை போலீஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 9 மீனவர்களையும் பல்வேறு நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.