பாஜகவுக்கு அனுமதி கொடுப்பதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மடிப்பாக்கம்: அனுமதி கொடுக்கப்படுவதில்லை... பா.ஜ.க. சார்பில் புதிதாக கொடிக்கம்பங்கள் நடுவதற்கு தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை பனையூரில் கட்சிக் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நிர்வாகிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று அண்ணாமலை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து மடிப்பாக்கத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, கட்சிக்கொடியை நடுமாறு பலமுறை கூறியும் வேகம் காட்டாத தொண்டர்கள் தற்பொழுது கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக கூறினார்.

பெருவாரியான மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அத்தேர்வை மாணவர்கள் யாரும் எதிர்ப்பதில்லை என்றும் கூறிய அண்ணாமலை நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதால் தான் திமுகவினர் மட்டும் அதனை எதிர்ப்பதாக தெரிவித்தார்.