நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்துங்கள்... சமூக ஆர்வலர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியா: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்... பூமி பந்துக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்தக் கோரி ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள நியூ கேசில் நகர துறைமுகம் வழியே பல நாடுகளுக்கு ஆஸ்திரேலியா நிலக்கரி ஏற்றுமதி செய்து வருகிறது.

இதனை கண்டித்து துறைமுகத்தின் அருகே திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அலைமிதவை பலகைகள் உதவியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்

பூமி பந்தை அடுப்பில் வைத்து எரிப்பது போன்று பதாகைகளை வைத்து நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்து பூமியை வெப்பமயமாக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.