பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை

சென்னை: போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை... பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மீடியன்களில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்கா அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் நகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நகரின் அழகை கெடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில், பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 340 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் பெயர் பலகைகள் மற்றும் இதர அறிவிப்பு பலகைகளில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறுகிறது.