தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனைமாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகிற அக்.15-ல் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம்2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவரும் செப்.20-க்குள் ஒப்படைக்க வேண்டும்.