கொரோனா நோயாளி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஓன்று. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,131 ஆக அதிகரித்துள்ளது. 5,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட 50 வயதுடைய நபர் தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.