மிலாது நபி .. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவிப்பு .

இந்தியா: நாடு முழுவதும் நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே இதையொட்டி தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நிலையில், மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அமைதியை உலகெங்கிலும் பரப்பிய முகமது நபியின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, அவரை போற்றி மகிழ்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.