தமிழகத்தில் இந்த தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: வரும் 22-ம் தேதி வரை மிதமான மழை ...... தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து வரும் 22-ம் தேதிகளில் தமிழக கடலோ மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் வரும் 23-ம் தேதி கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.