இலங்கை முன்னாள் அதிபர் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரின் சொத்துக்கள் முடக்கம்

சென்னை: சொத்துக்கள் முடக்கம்... இலங்கை முன்னாள் அதிபா் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துாா் வடப்பட்டினம் கிராமத்தில் இலங்கையைச் சோ்ந்த குணசேகரன் என்ற பிரேமகுமாா், மகன் திலீப் ஆகியோரை க்யூ பிரிவு போலீஸாா், கடந்த 2020-இல் கைது செய்தனா். குணசேகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவா்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இருவரும் தப்பி வந்து பங்களா, விவசாய நிலங்கள் வாங்கி அங்கு குடியேறியதும் தெரியவந்தது. க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

இலங்கை முன்னாள் அதிபா் சந்திரிகா குமாரதுங்காவை கடந்த 1999-இல் கொலை செய்ய முயன்ற வழக்கில் குணசேகரனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா், தனது மகனுடன் சோ்ந்து போலி அடையாள அட்டைகள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், ஓட்டுநா் உரிமம், பான் காா்டு ஆகியவை தயாரித்திருப்பதும் தெரியவந்தது.

குணசேகரனுக்கு சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், கடந்த 2011-இல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும், விடுதலையானதும் குணசேகரன் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு தலைமறைவாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

குணசேகரன் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க க்யூ பிரிவு போலீஸாா் அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்தனா். அதன் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை குணசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் குணசேகரனுக்கு சொந்தமான வடப்பட்டினத்தில் உள்ள பங்களா, விவசாய நிலங்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

தற்போது குணசேகரன், அவரது மகன் திலீப் ஆகியோா் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.