ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் அமைச்சர்களின் பினாமிகள் குறித்த தகவல் உள்ளது

மதுரை: பினாமிகள் குறித்த தகவல்... ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் குறித்து தகவல்கள் உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

என் மண், என் மக்கள் யாத்திரையை துவங்குவதற்காக ராமநாதபுரம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தொட்டுப் பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவதை விடுத்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம் பற்றி முதலமைச்சர் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் குறித்து தகவல்கள் உள்ளது.

என்.எல்.சி. பிரச்சினையில் அறுவடைக்கு தயாராக உள்ள விளைநிலத்தில் ஜே.சி.பி.யை விட்டு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.