உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமை பொறியாளர்

விருத்தாச்சலம்: தலைமை பொறியாளர் ஆய்வு... விருத்தாச்சலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாச்சலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நகரப்பகுதிகளுக்கு விரைவாக செல்வதற்காகவும் பெரியார் நகரிலிருந்து புதுக்கூரைப்பேட்டை வரை 28 ரூபாய் கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பாலத்தின் அணுகு சாலை மற்றும் கட்டுமான பணிகளை பார்வையிட்ட தலைமை பொறியாளர் கீதா, பருவமழை காலத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, அரசக்குழி பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாடு பணிகள் மற்றும் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.