நான்கு மாவட்டங்களில் முதலமைச்சர் இன்றும், நாளையும் ஆய்வு

இன்றும், நாளையும் ஆய்வு... 4 மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் ஆய்வு செய்கிறார்.

சாலை மார்க்கமாக இன்று கடலூர் செல்லும் அவர், வெள்ள சேதத்தை நேரில் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை ஆய்வு செய்கிறார்.

நாளை காலை நாகை மாவட்டத்திலும், தொடர்ந்து திருவாரூர், நன்னிலம் பகுதியிலும், பிற்பகலில் மயிலாடுதுறை சீர்காழி பகுதியிலும் சேதப்பகுதிகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து, நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.