திலினி பிரியமாலி விளக்கமறியல் 30ம் தேதி வரை நீட்டித்தது கோர்ட்

கொழும்பு: திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பான விசாரணையின் அடிப்படையில், திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, இசுரு பண்டார மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்பாண சிறைசாலைக்கு விஜயம்... வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.