விமான பயணிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ….விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிடு

புதுடெல்லி : நமது நாட்டில் சமீப நாட்களாக சற்று அதிகமாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விமான பயணிகளான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்டுள்ளது.


இதன்படி, அனைத்து விமான பயணிகள் முக கவசங்களை அணிவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தங்களுடைய பயணம் முழுவதும் பயணிகள் அவற்றை அணிந்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த 3ந்தேதி, விமான நிலையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவது பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) உறுதி செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேற்கூறிய, அறிவுரைகளை விமான பயணிகள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்களை விமானம் புறப்படுவதற்கு முன்பு கீழே இறக்கி விடப்படும் என்றும் கூறியுள்ளது. இதனால் விமன பயணிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தயவுசெய்து கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்துள்ளது.