3 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய கனடா அரசாங்கம்

கனடா: பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக் கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.


கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து இந்த உதவியை வழங்கியுள்ளது.

அதன் படி உணவு, சுகாதாரம், போஷாக்கு வசதிகள், குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை இதன் மூலம் வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.