சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும்.

எனவே இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார். சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது சபாநாயகரின் முழு உரிமை என அப்பாவு தெரிவித்துள்ளார்.கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அலுவல் ஆய்வுக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.