இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,06,752 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 5,71,460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்புடைய 3,11,565 பேர் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 23,727 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரவில் 2,60,924 பேரும், தமிழகத்தில் 1,42,798 பேரும், டெல்லியில் 1,13,740 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று மட்டும் 2,86,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.