உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் தடுப்பு மருந்து சோதனை நிலையிலே உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 1 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 33 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 805 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 13 ஆயிரத்து 143 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவில் இருந்து 89 லட்சத்து 1 ஆயிரத்து 652 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் மட்டும் 1,43,834 பேர் உயிரிழந்துள்ளனர்.