இலங்கையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 40 கொரோனாவால் பாதித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். 7 பேர் கடற் படை உறுப்பினர்கள் என்பதோடு, மற்றைய நபர் கடற்படை உறுப்பினர் ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 849 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நேற்று 12 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.